Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பேத்கர் சிலை உடைப்பு: பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்டு 26, 2019 08:00

கும்பகோணம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. வன்முறையின்போது வீசப்பட்ட ஏராளமான கற்கள், வாகனத்தின் நொறுங்கிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. அதையடுத்து இன்று கும்பகோணத்தில் பல்வேறு கட்சியினர் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நீதிமன்றம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி, தமிழ்நாடு குடியரசு கட்சி, மக்கள் அரசு கட்சி, அம்பேத்கர் எழுச்சி இயக்கம், நீல புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதேபோன்று காந்தி பூங்கா அருகில் விடுதலை சிறுத்தை கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நீலப்புலிகள் இயக்கம் திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்